Hey Welcome

Friday 7 October 2011

காலம்

இமைகளை இமைத்தவுடன்
எதிரே ஒரு சிறுவன் தோன்றினான் 
யாரென கேட்டேன் 
ஓடி ஒளிந்தவனை தேடி அழைந்தேன்...
தொலைவில் ஒரு கோவில் 
அருகே சென்றேன்...
மணி ஓசை கேட்டது 
யாரோ என் முதுகைத் தட்டியதைப்  போன்ற ஒரு உணர்வு 
கண் விழித்துப் பாருங்கள் 
மணி 6 என்றது ஒரு குரல்,
சுயநினைவை அடைந்த நான் 
இதுவரை 
கண்டது கனவே என எழுந்தேன்...

கனவில் வந்த முகம் யாரென 
பலமுறை 
மூலையைப் பிளிந்து ஆராய்ந்தேன் 
நினைவிற்கு வரவில்லை...
சில நாழிகைகள் கழிந்த பின்னரும் 
அந்த முகம் 
மனதில் களங்கமற்று நின்றது...

பள்ளியில் நண்பர்களுடன் எடுத்த 
பழைய புகைப்படம் ஒன்று 
சுவற்றில் அறையப்பட்டு இருந்தது.
அதைக் கூர்ந்து கவனிக்கையில் 
அகப்பட்டது 
அந்த முகம்..

காலச் சக்கரத்தின் ஓட்டத்தினால் 
உயிர் நண்பர்களைக் கூட 
மறந்துவிடும் 
இவ்வுலகில் 
கனவுகள் எத்தனை சுகமானவை...


No comments:

Post a Comment